கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு


கோவிஷீல்டு உற்பத்தி திறன்  120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு
x
தினத்தந்தி 3 Aug 2021 2:30 PM GMT (Updated: 3 Aug 2021 2:30 PM GMT)

கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்கப்பட திட்டமிடப்படுள்ளதாக   மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-  

உற்பத்தியாளர்கள் தெரிவித்த தகவலின் படி கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 110 மில்லியன் டோசில் இருந்து 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தி திறன் 25 மில்லியன் டோசில் இருந்து 58 மில்லியன் டோசில் இருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார். 

Next Story