பஞ்சாப்பில் அகாலிதள இளைஞரணி தலைவர் சுட்டு கொலை
பஞ்சாப்பில் அகாலிதள இளைஞரணி தலைவர் 4 பேர் கொண்ட கும்பலால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
மொகாலி,
பஞ்சாப்பின் மொகாலி நகரில் அகாலிதள கட்சியின் இளைஞரணி தலைவர் விக்கி மிதுக்கேரா என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டி சென்றுள்ளது. இதன்பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடி உள்ளது.
இதுபற்றி மொகாலியின் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சதீந்தர் சிங் கூறும்போது, 4 பேர் கும்பல் ஆனது விக்கியை விரட்டியபடி துப்பாக்கியால் 8 முதல் 9 முறை சுட்டுள்ளனர். இதில் விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story