பஞ்சாப்பில் அகாலிதள இளைஞரணி தலைவர் சுட்டு கொலை


பஞ்சாப்பில் அகாலிதள இளைஞரணி தலைவர் சுட்டு கொலை
x
தினத்தந்தி 7 Aug 2021 9:47 AM GMT (Updated: 7 Aug 2021 9:47 AM GMT)

பஞ்சாப்பில் அகாலிதள இளைஞரணி தலைவர் 4 பேர் கொண்ட கும்பலால் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.


மொகாலி,

பஞ்சாப்பின் மொகாலி நகரில் அகாலிதள கட்சியின் இளைஞரணி தலைவர் விக்கி மிதுக்கேரா என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் விரட்டி சென்றுள்ளது.  இதன்பின்னர் அவரை துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு தப்பியோடி உள்ளது.

இதுபற்றி மொகாலியின் மூத்த போலீஸ் சூப்பிரெண்டு சதீந்தர் சிங் கூறும்போது, 4 பேர் கும்பல் ஆனது விக்கியை விரட்டியபடி துப்பாக்கியால் 8 முதல் 9 முறை சுட்டுள்ளனர்.  இதில் விக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார் என கூறியுள்ளார்.  இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story