ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து


ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு உத்தவ் தாக்கரே வாழ்த்து
x
தினத்தந்தி 7 Aug 2021 8:15 PM GMT (Updated: 7 Aug 2021 8:15 PM GMT)

ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் நீரஜ் சோப்ராவுக்கு மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வரும் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரம் எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இவருக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தின் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “டோக்யோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவரது செயல்பாடு விளையாட்டு துறைக்கு நம்பிக்கை பூஸ்டர் அளித்து உள்ளது. நீரஜ் சோப்ரா ஒலிம்பிக்கில் பங்கேற்று நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளார்” என்றார்.

Next Story