கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வேண்டுமா? சில நிமிடங்களில் ‘வாட்ஸ் அப்’பில் பெறலாம்


கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வேண்டுமா? சில நிமிடங்களில் ‘வாட்ஸ் அப்’பில் பெறலாம்
x
தினத்தந்தி 9 Aug 2021 1:26 AM GMT (Updated: 9 Aug 2021 1:26 AM GMT)

பயணங்களின்போதும், விடுதிகளில் தங்கும்போதும் பெரும்பாலும் இந்த தடுப்பூசி சான்றிதழைக் கேட்பது வாடிக்கையாகி விட்டது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் 2 தவணை செலுத்திக்கொண்டால் மட்டும் போதாது. அதைத் தெரியப்படுத்தி சான்றளிக்கும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் சான்றிதழ் மிக முக்கியம்.

குறிப்பாக பயணங்களின்போதும், விடுதிகளில் தங்கும்போதும் பெரும்பாலும் இந்த தடுப்பூசி சான்றிதழைக் கேட்பது வாடிக்கையாகி விட்டது.

இவ்வளவு ஏன், ஆதார் அடையாள அட்டை போன்று இது ஒரு அடையாளமாகவே மாறி விட்டது என்று சொன்னாலும் தப்பில்லை.

எல்லோரும் இந்த சான்றிதழைப் பெற்று கைகளிலோ, சட்டைப்பையிலோ, பேண்ட் பையிலோ வைத்துக்கொண்டு அலைவது கடினமானது.

இப்போது இந்த சான்றிதழைப் பெற்று பத்திரப்படுத்த மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு புதிய வசதியைக் கொண்டு வந்து இருக்கிறது. இதைப் பெறுவதும் எளிது.

செல்போனில் 91 9013151515 என்ற ‘வாட்ஸ் அப’் எண்ணுக்கு ‘கோவிட் சர்டிபிகேட்’ என ‘டைப்’ செய்து அனுப்பினால் போதும். தடுப்பூசி போடுவதற்கு எந்த செல்போன் எண்ணை பயன்படுத்தினீர்களோ அந்த எண்ணை கேட்டு ‘வாட்ஸ் அப்’பில் தகவல் வரும். எண்ணை தெரிவித்தவுடன் ஓ.டி.பி. (ஒரு நேர கடவுச்சொல்) வரும். அந்த ஓ.டி.பி.யை நீங்கள் தெரிவிக்கிறபோது, அடுத்த சில நிமிடங்களில் ‘பி.டி.எப்.’ வடிவில் உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வந்து விடும்.

அப்புறம் என்ன, செல்போனில் நீங்கள் பத்திரப்படுத்திக்கொள்ளலாம். கேட்கிற இடங்களில் காட்டிக்கொள்ளலாம்.

இந்த தகவலை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவின் அலுவலகம், டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. என்ன, உங்கள் கொரோனா தடுப்பூசி சான்றிதழை ‘வாட்ஸ் அப்’பில் பெறத்தயாராகி விட்டீர்களா?


Next Story