சத்தீஷ்கர்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி


சத்தீஷ்கர்: டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
x
தினத்தந்தி 9 Aug 2021 3:45 PM GMT (Updated: 9 Aug 2021 3:45 PM GMT)

சத்தீஷ்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் தண்டிவாடா மாவட்டத்தில் உள்ள நெடுச்சாலையில் ஒரு டிராக்டர் சென்றுகொண்டிருந்தது. அந்த டிராட்கரில் 9 பேர் பயணம் செய்தனர். டிட்டம் என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுபாட்டை இழந்த டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த கோரவிபத்தில் டிராக்டரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விபத்தில் படுகாயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டிராக்டர் விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என சத்தீஷ்கர் முதல்-மந்திரி பூபேஷ் பஹேல் தெரிவித்துள்ளார்.

Next Story