ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து


ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து
x
தினத்தந்தி 10 Aug 2021 12:53 PM GMT (Updated: 10 Aug 2021 12:53 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்\வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேநீர் விருந்து அளிக்கிறார்.

புதுடெல்லி,

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 127 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்றனர். ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 7 பதக்கங்களுடன் இந்தியா 48-வது இடத்தை கைப்பற்றியது.

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்திய வீரர்-வீராங்கனைகள் நேற்று நாடு திரும்பினர். நாடு திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 14-ம் தேதி தேநீர் விருந்து அளிக்க உள்ளார். புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதிபவனில் இந்த தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

Next Story