இஸ்ரோவின் ஜிசாட்-1 செயற்கைகோள் நாளை விண்ணில் பாய்கிறது


இஸ்ரோவின் ஜிசாட்-1 செயற்கைகோள் நாளை விண்ணில் பாய்கிறது
x
தினத்தந்தி 11 Aug 2021 6:23 PM GMT (Updated: 11 Aug 2021 6:23 PM GMT)

இஸ்ரோவின் ஜிசாட்-1 செயற்கைகோள் நாளை காலை 5.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

பெங்களூரு,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நாளை ஜிசாட்-1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி.எப்-10 ராக்கெட் சுமந்து செல்கிறது.

இந்த செயற்கைக்கோளில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய பகுதிகளை இடைவிடாது கண்காணிப்பதற்காக இந்த செயற்கைகோள் பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமராவின் மூலம் இரவு, பகல் எந்த நேரமாக இருந்தாலும் கடும் மேக மூட்டமாக இருந்தாலும் மழைப் பொழிவின் போதும் துல்லியமான படத்தை எடுக்க முடியும்.

பாகிஸ்தான், சீன எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு படைகளின் நகர்வுகளையும் பயங்கரவாதிகளின் செயல்பாடுகளையும் எளிதில் கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. நாளை அதிகாலை 5.43 மணிக்கு செயற்கைக்கோள் ஏவப்படும் நிலையில், 26 மணி நேர கவுண்ட் டவுன் இன்று அதிகாலை 3.43 மணிக்கு தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Next Story