திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:30 PM GMT (Updated: 12 Aug 2021 10:30 PM GMT)

திருப்பதி கோவிலில் நேற்று முன்தினம் பக்தர்கள் ரூபாய் 2 கோடியே 41 லட்சம் காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமலை, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதன் காரணமாக சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து, சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் 21 ஆயிரத்து 156 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 12 ஆயிரத்து 652 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.2 கோடியே 41 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு பத்மாவதி விருந்தினர் மாளிகையில், கவுஸ்துபாம், எம்.பி.சி., சி.ஆர்.ஓ,. அலுவலகத்தில் அறைகள் எளிதில் கிடைக்கின்றன. இதனை பக்தர்கள் பயன்படுத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Next Story