மேற்கு வங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு


மேற்கு வங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 4:57 PM GMT (Updated: 13 Aug 2021 4:57 PM GMT)

மேற்கு வங்காளத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஆகஸ்ட் 31 வரை நீட்டித்து அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொல்கத்தா,

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து மேற்குவங்கத்தில் கடந்த மே 16ஆம் தேதி முதல் ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கானது தொற்று பரவல் நிலைகளுக்கேற்ப அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் 15 நாள்ட்களுக்கு நீட்டித்து மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் தளர்வுகளுடன் கூடிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி திரையரங்குகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் நீச்சல் குளங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் 50 சதவிகித பயனாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இரவு 10.30 மணி வரை மளிகை மற்றும் பலசரக்குக் கடைகள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Next Story