தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது


தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது
x
தினத்தந்தி 15 Aug 2021 6:27 AM GMT (Updated: 15 Aug 2021 6:27 AM GMT)

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிவைத்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், பல்வேறு  விருதுகளை வழங்கினார்.  டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரிலான விருது, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, முதல்வரின் நல்ஆளுமை விருது போன்ற பல விருதுகள் வழங்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த மருத்துவர் சண்முகப் பிரியாவுக்கு கல்பனா சாவ்லா விருது
மருத்துவர் நாராயண சாமிக்கு முதலமைச்சரின் நல்ஆளுமை விருது 
மருத்துவர் சாந்தி துரைசாமிக்கு ஔவையார் விருது 

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருது
உதகை மண்டலத்துக்கு சிறந்த நகராட்சிக்கான விருது 
கல்லக்குடிக்கு சிறந்த பேரூராட்சிக்கான விருது


Next Story