புதுச்சேரியில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


புதுச்சேரியில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 16 Aug 2021 11:35 PM GMT (Updated: 16 Aug 2021 11:35 PM GMT)

புதுச்சேரியில் புதிதாக 49 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.



புதுச்சேரி,


புதுச்சேரியில் கொரோனா தொற்று 1.57 சதவீதமாக குறைந்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில், நேற்று முன்தினம் வரை 6 லட்சத்து 7 ஆயிரத்து 629 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 509 பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டு கொண்டனர். 

இதுதவிர, மீதமுள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி வருகிறது.  இந்நிலையில் நேற்று முன்தினம் 3,142 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 49 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனால், மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 331 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 634 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 192 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 700 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். இதுவரை 1,805 பேர் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.


Next Story