மணிப்பூரில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவு
மணிப்பூர் மாநிலத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆக பதிவானது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நேற்று இரவு 9.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.7 ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் நிலநடுக்கமானது உணரப்பட்டது.
நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story