ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்


ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அடுத்த வாரம் உத்தரபிரதேசம் பயணம்
x
தினத்தந்தி 21 Aug 2021 1:51 AM GMT (Updated: 21 Aug 2021 1:51 AM GMT)

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், வருகிற 26-ந் தேதி முதல் 4 நாட்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். அவர், லக்னோவில் உள்ள ராஜ்பவனில் தங்குவார்.

ஆகஸ்டு 26-ந் தேதி லக்னோ அம்பேத்கர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பார்.27-ந் தேதி, சைனிக் பள்ளி வைர விழாவிலும், 28-ந் தேதி கோரக்பூரில் நடைபெறும் முதல் ஆயுஷ் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவிலும் அவர் கலந்துகொள்வார்.29-ந் தேதி அயோத்தி ராமர் கோவிலுக்கு முதல் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் செல்வார். அங்கு வழிபாடு மேற்கொள்ளும் அவர், அன்றைய தினமே டெல்லி திரும்புவார்.

ஜனாதிபதி பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும் மாநில கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ஆகியோர் கலந்துகொள்வர்.ஜனாதிபதி ராம்நாத் செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு ஒத்திகைகள் துவங்கியுள்ளன.

Next Story