பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கட்டுக்குள் வந்த கொரோனா; மத்திய பிரதேச முதல்-மந்திரி
மத்திய பிரதேசத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
போபால்,
மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுமக்கள் ஒத்துழைப்புடன் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. எனினும், கொரோனா முற்றிலும் நீக்கப்படவில்லை.
நாம் அச்சப்பட வேண்டாம். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அனைவரும் கொரோனா வழிகாட்டு அணுகுமுறையை கடைப்பிடிக்கும்படி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story