ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசுக்கு கேரள முதல்-மந்திரி நன்றி


ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்பு; மத்திய அரசுக்கு கேரள முதல்-மந்திரி நன்றி
x
தினத்தந்தி 23 Aug 2021 2:56 AM GMT (Updated: 23 Aug 2021 2:56 AM GMT)

தலீபான்கள் கைவசப்படுத்தியுள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தவர்கள் உள்ளிட்ட இந்திய மக்களை மீட்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரதம மந்திரி அலுவலகத்தின் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ததற்கு நன்றி’ என்று கூறியுள்ளார். 

மேலும், ஆப்கானிஸ்தான் தொடர்பாக உதவி வேண்டும் கேரளாக்காரர்கள், வௌிநாடுவாழ் கேரள மக்களுக்கான ‘நோர்க்கா ரூட்ஸ்’ பிரிவையோ, வெளியுறவு அமைச்சகத்தின் ஆப்கானிஸ்தானுக்கான 24 மணி நேர சிறப்பு பிரிவையோ தொடர்புகொள்ளலாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.


Next Story