பிரதமர் மோடியுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு


பிரதமர் மோடியுடன் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் சந்திப்பு
x
தினத்தந்தி 23 Aug 2021 6:42 AM GMT (Updated: 23 Aug 2021 6:42 AM GMT)

பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் சாதிவாரி இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் விரைவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தக்கோரி கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பில் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவு மக்களைத் தவிர வேறு பிரிவு மக்களைச் சாதிவாரியாகக் கணக்கிடக் கூடாது என்று கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அண்மையில் நிறைவடைந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தெரிவித்தது.

இருப்பினும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வருகின்றன. இதில் பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளமும் அடங்கும். இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் மாநில முதல் மந்திரியுமான  நிதிஷ்குமார் சாதிவாரி இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக அனைத்து கட்சி குழுவோடு பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார்.

இதன்படி, இன்று காலை பிரதமர் மோடியை இன்று நிதிஷ்குமார் சந்தித்துப் பேசினார்.  இந்த சந்திப்பின் போது, இந்த சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம், காங்கிரஸின் அஜீத் சர்மா, பாஜகவின் ஜனக் ராம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நிதிஷ் குமார், “பிரதமர் மோடி எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம்” என்றார். 


Next Story