அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு


அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆக பதிவு
x
தினத்தந்தி 23 Aug 2021 10:38 AM GMT (Updated: 23 Aug 2021 10:38 AM GMT)

அசாமில் இன்று பிற்பகல் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கவுகாத்தி,

அசாமில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. அசாமின் மேற்கு பகுதியில் உள்ள கோக்ரஜ்ஹார் பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தை மையாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மேற்கு அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தின் வடக்குப் பகுதியில் உள்ள இடங்களில்  உணரப்பட்டது. 

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் அங்குள்ள மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு தெருக்களில் திரண்டனர். நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. பொருட்களும் சேதம் அடைந்ததாக தற்போது வரை தகவல் இல்லை. அசாமில் கடந்த ஏப்ரல்  28 ஆம் தேதி ரிக்டரில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Next Story