5 ராணுவ பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து


5 ராணுவ பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து
x
தினத்தந்தி 23 Aug 2021 10:45 PM GMT (Updated: 23 Aug 2021 10:45 PM GMT)

5 ராணுவ பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து

புதுடெல்லி, 

இந்திய ராணுவத்தில் 26 ஆண்டுகள் பணி முடித்த 5 பெண் அதிகாரிகளுக்கு ‘கர்னல்’ அந்தஸ்துக்கு பதவி உயர்வு வழங்க ராணுவ தேர்வு வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. 

சங்கீதா சர்டானா, சோனியா ஆனந்த், நவ்நீத் டுக்கால், ரீனு கன்னா, ரிட்சா சாகர் ஆகிய 5 பெண் அதிகாரிகளுக்கு இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது. இவர்கள் ராணுவத்தில் சிக்னல் படைப்பிரிவு, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் என்ஜீனியர் படைப்பிரிவு, என்ஜினீயர் படைப்பிரிவு ஆகியவற்றில் பணியாற்றி வருபவர்கள். இந்த பிரிவுகளில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு கர்னல் அந்தஸ்து கிடைப்பது இதுவே முதல்முறை ஆகும்.

Next Story