உத்தரகாண்டில் நிலச்சரிவு; 200 பேர் மீட்பு


உத்தரகாண்டில் நிலச்சரிவு; 200 பேர் மீட்பு
x
தினத்தந்தி 24 Aug 2021 1:37 AM GMT (Updated: 24 Aug 2021 1:37 AM GMT)

உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை பேரிடர் பொறுப்பு படை மீட்டு உள்ளது.




சமோலி,

உத்தரகாண்டில் பெய்து வரும் கனமழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இந்நிலையில், சமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமம் அருகே தமஸ் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.

இதில் பலர் சிக்கி கொண்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்து மாநில பேரிடர் பொறுப்பு படை சம்பவ பகுதிக்கு சென்றது.  அந்த குழு, நிலச்சரிவில் சிக்கிய 200 பேரை மீட்டு வெளியேற்றி உள்ளது.


Next Story