உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி கைது


உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்திய மந்திரி கைது
x
தினத்தந்தி 24 Aug 2021 10:28 AM GMT (Updated: 24 Aug 2021 10:28 AM GMT)

மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரே குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய மந்திரி நாராயண் ரானா கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

 மராட்டிய  முதல் மந்திரி  உத்தவ் தாக்கரே  குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய  மந்திரி  நாராயண் ரானா கைது செய்யப்பட்டுள்ளார். 

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய  மந்திரி நாராயண் ரானா  ‘மராட்டிய முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன்" எனப் பேசியிருந்தார். 

அவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாசிக் மற்றும் புனே காவல் நிலையங்களில் சிவசேனா அளித்த புகாரின் அடிப்படையில்  அவர் மீது இன்று காலை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது.  இந்நிலையில், நாசிக் காவல்துறையினர் மத்திய மந்திரியை இன்று கைது செய்துள்ளனர். 


Next Story