ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 24 இந்தியர்கள் மீட்பு


ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 24 இந்தியர்கள் மீட்பு
x
தினத்தந்தி 26 Aug 2021 3:31 AM GMT (Updated: 26 Aug 2021 3:31 AM GMT)

ஆப்கானிஸ்தானில் சிக்கிய 24 இந்தியர்கள் உள்பட 35 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் 31-ம் தேதி முழுமையாக வெளியேற உள்ள நிலையில் அந்நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளன. மேலும், ஆட்சியமைப்பதற்கான நடவடிக்கைகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தானில் சிக்கிய இந்தியர்கள் உள்பட 800-க்கும் மேற்பட்டோரை இந்தியா இதுவரை மீட்டுள்ளது. விமானப்படை விமானங்கள், ஏர் இந்தியா விமானங்கள் மூலம் நடைபெற்று வரும் இந்த மீட்பு நடவடிக்கைகளுக்கு ’ஆபரேஷன் தேவி சக்தி’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியிருந்த 24 இந்தியர்கள் உள்பட 35 பேரை இந்தியா மீட்டுள்ளது. காபூல் விமானநிலையத்தில் இருந்து 35 பேரை மீட்ட இந்திய விமானப்படை விமானம் டெல்லி நோக்கி புறப்பட்டது. காபூலில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் இன்னும் சில மணிநேரங்களில் டெல்லி வந்தடைய உள்ளது.

Next Story