அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் வெள்ளம்


அசாமில் கனமழை: 11 மாவட்டங்களில் வெள்ளம்
x
தினத்தந்தி 28 Aug 2021 8:19 AM GMT (Updated: 28 Aug 2021 8:19 AM GMT)

அசாமில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அம்மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அம்மாநிலத்தில் உள்ள 11 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 243 கிராமங்களை சேர்ந்த 1 லட்சத்து 33 ஆயிரத்து 78 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் சாலைப்போக்குவரத்து, மின்சாரம் தடைபட்டுள்ளது.  

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

Next Story