ஆந்திராவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் 2 பேர் பலி
ஆந்திராவில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் குழந்தை உள்பட 2 பேர் பலியானார்கள்.
அமராவதி,
ஆந்திர மாநிலம், கோதாவரி மாவட்டத்தில் உள்ள நர்சபுரம் பகுதியில் இன்று வீடு ஒன்றில் இருந்து எரிவாயு சிலிண்டர் வெடித்தது. இதைத்தொடர்ந்து வீட்டில் தீப்பற்றியது.
இந்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்த பொம்மிடி நாகராஜு (35) மற்றும் அவரது ஆறு வயது மகன் ரோகித் குமார் ஆகியோர் பலியானார்கள். மேலும் விபத்தில் வீட்டின் சுவர்களும் சேதமடைந்தன.
தகவல் அறிவிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story