டெல்லியில் மேலும் 29 பேருக்கு கொரோனா தொற்று
டெல்லியில் கொரோனா பாதிப்பு பரவல் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கணிசமாக கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் அங்கு விதிக்கப்பட்டு இருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது அங்குள்ள மக்களை நிம்மதி பெருமூச்சு விடச்செய்துள்ளது. இந்த நிலையில், மக்களுக்கு மேலும் ஆறுதல் அளிக்கும் விஷயமாக தொடர்ந்து 3-வது நாளாக கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் 29- பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பரவல் விகிதம் 0.04 சதவிகிதமாக உள்ளது.
Related Tags :
Next Story