மராட்டியத்தில் குழந்தைகள் காப்பகத்தில் 18 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
மராட்டியத்தில் குழந்தைகள் காப்பகத்தில் 18 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை 52,844 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 1,37,157 பேர் உயிரிழந்து உள்ளனர்.
மராட்டியத்தின் மும்பை நகரில் மான்குர்த் பகுதியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்து உள்ளது. இந்த நிலையில், காப்பகத்தில் வசித்த 18 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனை தொடர்ந்து வஷி நகா பகுதியில் உள்ள கொரோனா மையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story