மேற்குவங்காளம்: பாஜக எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்...


மேற்குவங்காளம்: பாஜக எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்...
x
தினத்தந்தி 30 Aug 2021 11:04 AM GMT (Updated: 30 Aug 2021 11:04 AM GMT)

மேற்குவங்காளத்தில் பாஜக எம்.எல்.ஏ. திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் பன்கூரா மாவடம் பிஷ்னுபூர் தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. தன்மொய் கோஷ். இவர் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அர்சிதாவை விட 11 ஆயிரத்து 133 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

இந்நிலையில், எம்.எல்.ஏ. தன்மொய் கோஷ் இன்று பாஜகவில் இருந்து விலகி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 

திரிணாமுல் காங்கிரசில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தன்மொய், பழிவாக்கும் அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது. மத்திய விசாரணை முகமைகளை பயன்படுத்தி மேற்குவங்காள மக்களின் உரிமைகளை பறிக்க பாஜக முயல்கிறது. பொதுமக்கள் நலன்கருதி அனைத்து அரசியல்வாதிகளும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை ஆதரிக்க வேண்டும்’ என்றார். 

Next Story