'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏவுகணை கொள்முதல் - மத்திய அரசு


மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏவுகணை கொள்முதல் - மத்திய அரசு
x
தினத்தந்தி 30 Aug 2021 6:20 PM GMT (Updated: 30 Aug 2021 6:20 PM GMT)

'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏவுகணை கொள்முதல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு புதிய ஊக்கம் அளிக்கும் விதமாக நம் ராணுவத்திற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆகாஷ் எஸ்' ஏவுகணைகள் மற்றும் 25 அதிநவீன 'துருவ் மார்க் - 3' இலகு ரக ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணை மற்றும் 25 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இதற்கான முன்மொழிவு ராணுவ அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி  ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்நிலை கூட்டத்தில் இந்த முன்மொழிவுக்கான அனுமதி விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story