தெலுங்கானாவில் மேலும் 338-பேருக்கு கொரோனா
தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கானாவில் மேலும் 338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,58,054- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,873-ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணி நேரத்தில் 364 -பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,864- ஆக உள்ளது.
தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 74 ஆயிரத்து 207- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.58 சதவிகிதமாகவும், கொரோனா மீட்பு விகிதம் 94.48 சதவிகிதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story