தெலுங்கானாவில் மேலும் 338-பேருக்கு கொரோனா


தெலுங்கானாவில் மேலும் 338-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 31 Aug 2021 4:32 PM GMT (Updated: 31 Aug 2021 4:32 PM GMT)

தெலுங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் 338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத், 

தெலுங்கானாவில் மேலும் 338- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  6,58,054- ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3,873-ஆக  உயர்ந்துள்ளது. 

கொரோனா தொற்றில் இருந்து கடந்த  24 மணி நேரத்தில் 364 -பேர் தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.  மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,864- ஆக உள்ளது.   

தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 74 ஆயிரத்து 207- மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 0.58 சதவிகிதமாகவும்,  கொரோனா மீட்பு விகிதம் 94.48 சதவிகிதமாகவும் உள்ளது. 

Next Story