ஆந்திரா: பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து


ஆந்திரா: பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்  தீ விபத்து
x
தினத்தந்தி 3 Sep 2021 7:55 AM GMT (Updated: 3 Sep 2021 7:55 AM GMT)

தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயவாடா

ஆந்திர மாநிலம்  விஜயவாடா நகருக்கு அருகே  கன்னவரம் மண்டலத்தில் தெம்பள்ளியில்  பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில்  ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலியில்  இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 

 மளமளவென்று தீ பரவ தொடங்கியது உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Next Story