தெலங்கானாவில் கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமரிடம் சந்திரசேகர ராவ் கோரிக்கை


தெலங்கானாவில் கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பிரதமரிடம் சந்திரசேகர ராவ் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Sep 2021 8:25 PM GMT (Updated: 3 Sep 2021 8:25 PM GMT)

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசிய தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், அவரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார்.

புதுடெல்லி,

தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் 3 நாள் பயணமாக கடந்த 1-ந் தேதி டெல்லி சென்றார். அங்கு 2-ந் தேதி தனது தெலுங்கானா ராஷ்டிர சமிதி அலுவலகத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்றார்.நேற்று அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் கொடுத்தார். அதில் தெலுங்கானாவில் மாவட்டங்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால், மாநிலத்துக்கான ஐ.பி.எஸ். அதிகாரிகள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், கூடுதலாக 21 நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் சாலை அமைப்பதற்கான நிதிச்சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும், பழங்குடியினர் பல்கலைக்கழகம் அமைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், இந்திய தகவல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் ஆகியவற்றை அமைக்க வேண்டும், வாரங்கல் ஜவுளி பூங்காவுக்கு ரூ.1,000 கோடி மானிய உதவி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றுள்ளன.

Next Story