மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4130 -பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4130 -பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Sep 2021 4:58 PM GMT (Updated: 4 Sep 2021 4:58 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,130 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் இன்று  ஒரேநாளில் 4,130 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,310 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 64,82,117ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்பால்  இன்று மேலும் 64 பேர் பலியானார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 1,37,707ஆக உயர்ந்துள்ளது.மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் 50,466-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவிலிருந்து இன்று 5,506 பேர் குணமடைந்தனர்.  குணமடைந்தோரின் எண்ணிக்கை 62,88,851ஆக உயர்ந்துள்ளது.


Next Story