கோவில்கள் திறப்புக்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் - உத்தவ் தாக்கரே
கோவில்களை திறக்க கோரி போராடுவதற்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள் என உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநில முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியதாவது:-
கோவில்களை திறக்க கோரி போராடுவதற்கு பதில் கொரோனாவுக்கு எதிராக போராடுங்கள். கோவில்கள் உள்ளிட்டவற்றை திறக்ககோரி போராட்டம் நடத்த வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
டெங்கு மற்றும் மலேரியா நோய்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நேரத்தில் அவற்றின் அறிகுறிகள் வேறுபட்டவை. எனவே, அத்தகைய நோயாளிகள் கண்டிப்பாக கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
சிலர் சில நிறுவனங்களை மீண்டும் திறக்க வேண்டும் என அவசரப்படுகிறார்கள். இன்னும் சிறிது நேரம் காத்திருக்கும்படி நான் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் நாங்கள் அவற்றைத் திறக்க விரும்பவில்லை, பின்னர் நிலைமை மோசமாகிவிட்டால் மீண்டும் மூட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும் என்றார்.
Related Tags :
Next Story