கர்நாடகத்தில் 50 போலீசாருக்கு பதவி உயர்வு - டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவு


கர்நாடகத்தில் 50 போலீசாருக்கு பதவி உயர்வு - டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவு
x
தினத்தந்தி 5 Sep 2021 8:28 PM GMT (Updated: 5 Sep 2021 8:28 PM GMT)

கர்நாடகத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாருக்கு, சரியான நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதன்படி, கர்நாடகத்தில் 25 இன்ஸ்பெக்டா்கள் உள்பட 50- போலீசாருக்கு பதவி உயர்வு வழங்கி போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, மாநிலத்தில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வந்த 25 பேர் துணை போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பணி இடமாற்றமும் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

பெங்களூருவில் பேடராயனபுரா போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய நாகராஜ், லோக் ஆயுக்தா துணை போலீஸ் சூப்பிரண்டாகவும், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பசவராஜ், மாநில உளவுப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 25 சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story