அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா


அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 Sep 2021 6:31 PM GMT (Updated: 6 Sep 2021 6:31 PM GMT)

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் 636- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 556- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் மட்டும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

அசாமில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,068- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 491 ஆக உள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 5,710- ஆகும். 

சத்தீஷ்கர் மாநிலத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 46 பேர் குணம் அடைந்துள்ளனர். மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 354 ஆக உள்ளது. 


Next Story