கேரளாவில் காஷ்மீரை சேர்ந்தவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகள் பறிமுதல்
கேரளாவில் தனியார் பாதுகாவலர்கள் 18 பேரிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் தனியார் பாதுகாப்பு அமைப்புகளிடம் இருந்து உரிமம் இல்லாத துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுபற்றி திருவனந்தபுரம் நகரில் உள்ள கரமனா காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவானது.
இதன் அடிப்படையில், போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதில், தனியார் பாதுகாவலர்கள் 18 பேரிடம் இருந்து, உரிமம் இல்லாத 19 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. இதனை கொச்சி போலீசார் தெரிவித்து உள்ளனர். அவர்கள் அனைவரும் காஷ்மீரின் ரஜோரி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story