கர்நாடகாவில் மேலும் 851- பேருக்கு கொரோனா
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 851-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமாக கட்டுக்குள் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 851 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 790-பேர் குணம் அடைந்த நிலையில் 15 பேர் உயிரிழந்தனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 17,432 ஆக உள்ளது.
கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 29 லட்சத்து 02 ஆயிரத்து 089- ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37,441 ஆக உள்ளது.
Related Tags :
Next Story