ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் - பரூக் அப்துல்லா
இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றி ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் நல்லாட்சியை வழங்குவார்கள் என்று நம்புகிறேன் என தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார்.
காபூல்
ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.
இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.
இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர். மக்கள் மட்டுமல்லாமல் அரசியல் கட்சி தலைவர்கள், எம்.பிக்கள் என பலர் வெளிநாடுகளில் அடைக்கலம் தேடுகின்றனர்.
ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தலீபான்கள் ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றார்கள்.
இடைக்கால மந்திரிசபையையும் , இடைக்கால பிரதமரையும் தலீபான்கள் அறிவித்து உள்ளனர்.
தற்போது முந்தைய ஆட்சியின்போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும் மற்றும் கொலை செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், இடைக்கால அரசின் பிரமரை நேற்று அறிவித்தனர். மேலும் இடைக்கால மந்திரி சபையையும் அறிவித்து உள்ளனர்.
ஆப்கானிஸ்தான் இடைக்கால பிரதமராக அறிவிக்கப்பட்டவர் ஐ.நா பயங்கரவாத பட்டியலில் தேடப்படும் நபர். உள்துறை மந்திரியாக அறிவிக்கப்பட்டுள்ளவர், அல் கொய்தாவுக்கு நெருக்கமான ஹக்கானி ஆயுதக்குழுவின் தலைவராக இருப்பவர் ஆவார்.
இந்த நிலையில் ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா கூறியதாவது: -
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலீபான்கள் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு ஏற்ப நல்லாட்சியை வழங்குவார்கள், மனித உரிமையை மதித்து நடப்பார்கள் என நம்புகிறேன். நாட்டின் புதிய தலைவர்கள் மனித உரிமைகளை மதிக்க வேண்டும். அனைத்து நாடுகளுடன் அவர்கள் நட்புறவை அவர்கள் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அவரது இந்த கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story