அக்டோபர் 4-தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்குக் முதல் தவணை தடுப்பூசி - கேரளா சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தகவல்
கேரளாவில் அக்டோபர் 4-ம் தேதிக்குள் கல்லூரி மாணவர்களுக்குக் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என அம் மாநில சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்,
கேரளா சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
செப்டம்பர் 30-க்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அக்டோபர் 4-க்குள் கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்படும்.
எங்களிடம் உள்ள தகவலின்படி, ஜூன் 15 முதல் செப்டம்பர் வரை உயிரிழந்தவர்களில் 90 சதவிகிதத்தினர் இணை நோய் உள்ளவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆவர்.
Related Tags :
Next Story