மராட்டியத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 9 Sep 2021 6:23 PM GMT (Updated: 9 Sep 2021 6:23 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, மராட்டியத்தில் இன்று 4,219 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 64,87,025 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 50,229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,538 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 62,95,236 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,38,017 ஆக அதிகரித்துள்ளது.

Next Story