அசாமில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அசாம் மாநிலத்தில் மேலும் 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,
அசாமில் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, அசாமில் நேற்று 437 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 93 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 524 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், அசாமில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 82 ஆயிரத்து 17 ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 4 பேர் உயிரிழந்தனர். இதனால், அசாமில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 727 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story