மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 10 Sep 2021 2:44 PM GMT (Updated: 10 Sep 2021 2:44 PM GMT)

மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,154- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் மேலும் 4,154- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,524- ஆகும். கொரோனா தொற்றுக்கு இன்று ஒருநாளில் மட்டும் 44 பேர் உயிரிழந்துள்ளனர். 

மராட்டியத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 64 லட்சத்து 91 ஆயிரத்து 179- ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 62 லட்சத்து 99 ஆயிரத்து 760- ஆக உள்ளது. 

தொற்று பாதிப்பால்  இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,38,061- ஆக உயர்ந்துள்ளது.  மராட்டியத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 49,812- ஆக உள்ளது. 


Next Story