நிபா பாதிப்பு மைசூரில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்: கலெக்டர் அறிவிப்பு


நிபா பாதிப்பு மைசூரில் இல்லை; மக்கள் அச்சப்பட வேண்டாம்:  கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Sep 2021 11:43 PM GMT (Updated: 10 Sep 2021 11:43 PM GMT)

மைசூரில் நிபா பாதிப்பு இல்லை என்றும் மக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கலெக்டர் கூறியுள்ளார்.


மைசூர்,

கர்நாடகாவின் மைசூரு மாவட்ட கலெக்டர் கவுதம் பகாதி கூறும்போது, கேரளாவில் கொரோனா தொற்று பரவுவதால், அம்மாநில எல்லைப்பகுதியில், கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளோம். துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

கேரளாவிலிருந்து, மைசூருக்கு வருவோரை, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்துகிறோம். அம்மாநிலத்திலிருந்து வருவோர், கொரோனா நெகடிவ் அறிக்கை வைத்திருப்பது கட்டாயம். அறிக்கை இருந்தால் மட்டும், உள்ளே அனுமதிக்கப்படுவர்.

அக்டோபர் வரை, கேரளாவுக்கு செல்லும் எண்ணத்தை, மக்கள் கைவிடுவது நல்லது.  கேரளா கொரோனா ஹாட் ஸ்பாட்டாக இருந்தது.

தற்போது நிபா தொற்றும் தாண்டவமாடுகிறது. இது, கர்நாடவிலும் நுழையும் அபாயம் உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். மைசூரில் நிபா தொற்று தென்படவில்லை அதனால் மக்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Next Story