குஜராத்தில் இன்று கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு இல்லை
குஜராத்தில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.
காந்திநகர்,
குஜராத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, குஜராத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 600 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 162 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று மேலும் 12 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், குஜராத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 15 ஆயிரத்து 356 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், குஜராத்தில் இன்று கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. ஆனாலும், அம்மாநிலத்தில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 82 ஆக உள்ளது.
குஜராத்தில் இன்று 3 லட்சத்து 73 ஆயிரத்து 351 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் இதுவரை செலுத்தபட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 5 கோடியே 22 லட்சத்து 53 ஆயிரத்து 771 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story