மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு


மராட்டியம்: உத்தவ் தாக்கரே உடன் சரத் பவார் சந்திப்பு
x
தினத்தந்தி 11 Sep 2021 8:56 PM GMT (Updated: 11 Sep 2021 8:56 PM GMT)

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் சந்தித்தார்.

மும்பை,

மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று சந்தித்தார். உத்தவ் தாக்கரேவின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது சரத் பவாரின் மனைவி, மகளும் எம்.பி.யுமான சுப்ரியா சுலே, அவரது கணவர் மற்றும் உத்தவ் தாக்கரேவின் மனைவி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது உத்தவ் தாக்கரேவின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு வழிபாடு செய்தனர். 

மராட்டியத்தில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியின் தலைமையாக சிவசேனா உள்ளது. அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே மராட்டிய முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story