டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை; இந்திய வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு ராஜஸ்தானில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிரமடைந்து உள்ளது. இதனால் ஞாயிற்று கிழமை காலை முதல் தொடர்ந்து மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த மழையானது, டெல்லி-என்.சி.ஆர்., பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானிலும் பெய்தது. ஆச்சரியப்படும் வகையில் கடந்த 121 ஆண்டுகளில் இல்லாத வகையில், டெல்லியில் 24 மணிநேரத்தில் அதிகளவு மழை பெய்துள்ளது.
டெல்லியில் 46 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிக அளவு மழை பொழிந்துள்ளது. கடந்த 1975ம் ஆண்டுக்கு பின்பு (1155 மி.மீ.) டெல்லியில் கடந்த 4 மாதங்களில் 1139 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
டெல்லி விமான நிலையம் உள்பட பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், வடக்கு டெல்லி, கர்முக்தேஷ்வர், பாக்பத், கைத்தல் மற்றும் ரோத்தக் உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்த 2 மணிநேரத்தில் லேசான அளவில் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story