ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி


ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி
x
தினத்தந்தி 13 Sep 2021 5:55 AM GMT (Updated: 13 Sep 2021 5:55 AM GMT)

ஞாயிற்றுக்கிழமைக்கும் திங்கட்கிழமைக்கும் வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடியின் சாதனை-ராகுல்காந்தி

புதுடெல்லி

ஞாயிறு - திங்கள் இடையே வேறுபாடு இல்லாமல் செய்ததே மோடி அரசின் சாதனை என்று காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். 

ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில்  அமெரிக்காவை சேர்ந்த போர்ட் நிறுவனம் இந்தியாவில் தனது வாகன உற்பத்தியை நிறுத்த முடிவு செய்திருப்பது குறித்த பத்திரிக்கை செய்தியை பகிர்ந்துள்ளார். இந்த முடிவால் 4,000 சிறு நிறுவனங்கள் மூடப்படும் என்று தொழில்துறையினர் கூறி இருப்பது அந்த செய்தியில் இடம் பெற்றுள்ளது.

அந்த பதிவில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைக்கும், வேலை நாளான திங்கட்கிழமைக்கும் இடையிலான வித்யாசத்தை முடிவுக்கு கொண்டு வந்தது தான் மோடி ஆட்சியில் ஏற்பட்ட வளர்ச்சி என்று அவர் விமர்சித்துள்ளார். 

மேலும் வேலையே இல்லாத போது அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? திங்கட்கிழமையாக இருந்தால் என்ன? என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.


Next Story