ஸ்ரீநகர்: தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகள் கண்டெடுப்பு


ஸ்ரீநகர்: தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 13 Sep 2021 7:24 AM GMT (Updated: 13 Sep 2021 7:24 AM GMT)

ஸ்ரீநகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கையெறி குண்டுகளை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்து செயலிழக்க செய்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா-பந்தசவுக் தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் இன்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சாலையின் அருகே வைக்கப்பட்டிருந்த மணல் மூட்டைகளை பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். 

அந்த மணல் மூட்டையில் பயங்கரவாதிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சீனாவில் தயாரிக்கப்பட்ட 6 கையெறி குண்டுகள் இருப்பதை பாதுகாப்பு படையினர் கண்டெடுத்தனர். 

உடனடியாக அந்த கையெறி குண்டுகளை கைப்பற்றிய பாதுகாப்பு படையினர் அதை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கு வெடிகுண்டு நிபுணர்களால் அந்த 6 கையெறி குண்டுகளும் செயலிழக்க வைக்கப்பட்டது.

Next Story