ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம்


ஏர் இந்தியா விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு... அவசர அவசரமாக தரையிறக்கம்
x
தினத்தந்தி 13 Sep 2021 7:58 AM GMT (Updated: 13 Sep 2021 7:58 AM GMT)

திருவனந்தபுரத்தில் இருந்து இன்று காலை சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் சார்ஜா நகருக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. 

அந்த விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உள்பட மொத்தம் 176 பேர் பயணம் செய்தனர். புறப்பட்டு 30 நிமிடங்களில் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. 

உடனடியாக துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனால், 176 பேரும் எந்த வித பாதிப்பும் இன்றி உயிர் தப்பினர். பின்னர் 170 பயணிகளும் மாற்று விமானம் மூலம் சார்ஜா புறப்பட்டு சென்றனர்.

Next Story