மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் பேரன் பா.ஜனதாவில் சேர்ந்தார்
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 1982-ம் ஆண்டு முதல் 1987-ம் ஆண்டுவரை ஜனாதிபதியாக இருந்தார். அவருடைய பேரன் இந்தர்ஜித் சிங் நேற்று பா.ஜனதாவில் சேர்ந்தார்.
டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமையகத்தில் மத்திய மந்திரி ஹர்தீப்சிங் பூரி முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார். அவரை பா.ஜனதா பொதுச்செயலாளர் துஷ்யந்த் கவுதம் வரவேற்றார்.
பின்னர், இந்தர்ஜித் சிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
என் தாத்தா ஜெயில்சிங்கிடம் காங்கிரஸ் கட்சி உரிய முறையில் நடந்து கொள்ளவில்லை. நான் பா.ஜனதாவில் சேர வேண்டும் என்று அவர் விரும்பினார். என்னை வாஜ்பாய், அத்வானி ஆகியோரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார்.அவரது விருப்பத்தை இப்போது நிறைவேற்றி இருக்கிறேன். மதன்லால் குரானா, டெல்லி முதல்-மந்திரியாக இருந்தபோது நான் பா.ஜனதாவுக்கு பிரசாரம் செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story