தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமனம்


தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமனம்
x
தினத்தந்தி 13 Sep 2021 9:16 PM GMT (Updated: 13 Sep 2021 9:16 PM GMT)

தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பயத்தின் (என்.சி.எல்.ஏ.டி.) தலைவராக இருந்த நீதிபதி முகோபாத்யாயா கடந்த ஆண்டு மார்ச் 14-ந்தேதி ஓய்வு பெற்றார்.

அதைத்தொடர்ந்து நீதிபதிகள் பன்சிலால் பட், சீமா ஆகியோர் அடுத்தடுத்து பொறுப்பு தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் நீதிபதி சீமாவின் பதவிக்காலம் கடந்த 10-ந்தேதி நிறைவடைந்தது. எனவே இந்த தீர்ப்பாயத்தின் புதிய பொறுப்பு தலைவராக நீதிபதி வேணுகோபால் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார்.

மத்திய அரசின் பல்வேறு தீர்ப்பாயங்களில் 250-க்கு மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தது.அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 2 தீர்ப்பாயங்களுக்கு 31 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது என்.சி.எல்.ஏ.டி.க்கு பொறுப்பு தலைவர் நேற்று நியமனம் செய்யப்பட்டு உள்ளார். எனினும் முக்கிய தீர்ப்பாயங்களில் ஒன்றான என்.சி.எல்.ஏ.டி.க்கு கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நிரந்தர தலைவர் இல்லாமல் 3-வது முறையாகவும் பொறுப்பு தலைவரையே நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story